நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஷாலின் ஆக்சன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாத நிலையில், தெலுங்கு, ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார் தமன்னா. அதோடு வெப் சீரியல்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் ஈசா யோகா மையத்திற்கு சென்றபோது தான் பெற்ற அனுபவத்தை ஒரு வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. அந்த வீடியோவில், ஈஷா யோகா மையத்தில் இருந்த மிக அழகான மூன்று நாட்களை இன்னும் கடந்து வருகிறேன். சாம்பவி கிரியாவை கற்றுக்கொள்ள விரும்புவதிலிருந்து இந்த உலகம் எவ்வளவு ஆச்சரியமாக உள்ளது என்பதை அனுபவிக்கிறேன். ஒவ்வொரு தருணமும் புத்துயிர் பெற்றேன். ஏராளமான ஆரோக்கிய நலன்கள் மற்றும் எனது ஆன்மிக பயணத்தை தொடங்கக்கூடிய ஒரு கிரியாவில் துவங்கியதை பாக்கியமாக உணர்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் தமன்னா.