ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் |
யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. இதையடுத்து ஹிந்தியில் சல்மான்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் 24 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள சமந்தா பதிவிடும் ஒவ்வொரு அப்டேட்களுக்கும் லட்சக்கணக்கான லைக்ஸ் கிடைத்து வருகிறது. இந்த நேரத்தில் திடீரென்று சமந்தாவின் இன்ஸ்டாவில் மர்ம நபரின் புகைப்படம் வெளியானதால் அவரது இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில் சமந்தாவின் மேனேஜர் அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பதிவு தவறாக இடம் பெற்றது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக சமந்தாவின் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.