தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. இதையடுத்து ஹிந்தியில் சல்மான்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் 24 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள சமந்தா பதிவிடும் ஒவ்வொரு அப்டேட்களுக்கும் லட்சக்கணக்கான லைக்ஸ் கிடைத்து வருகிறது. இந்த நேரத்தில் திடீரென்று சமந்தாவின் இன்ஸ்டாவில் மர்ம நபரின் புகைப்படம் வெளியானதால் அவரது இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில் சமந்தாவின் மேனேஜர் அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பதிவு தவறாக இடம் பெற்றது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக சமந்தாவின் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.