ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமாரின் நண்பனாக நடித்து புகழ்பெற்றவர் சவுந்தர்ராஜா. அதன் பிறகு பல படங்களில் ஹீரோவுக்கு நண்பர், வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்தார் 'ஒரு கனவு போல', 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படங்களில் ஹீரோவாக நடித்த சவுந்தர்ராஜா சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ‛சாயாவனம்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இதனை மலையாள இயக்குனர் அனில் இயக்குகிறார். இந்தப் படத்தை தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார். தேவானந்தா, அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எல் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பொலி வர்கீஸ் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் அனில் கூறியதாவது: சாயாவனம் என்றால் அடர்ந்த காடு என்று பொருள்படும், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும். படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது. முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்று நான் நம்புகிறேன். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் காடுகளைப் போல அடர்த்தி மிக்கவை, அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன. என்கிறார் அனில்.