பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பிரபாஸ் ஜோடியாக தற்போது சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை கே.ஜி.எப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதையடுத்து அழுத்தமான கதாபாத்திரத்திங்களில் நடிப்பதற்காக கதை கேட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், திருமணம் குறித்து வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகா என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் கூடிய சீக்கிரமே ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் திருமணம் குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. அந்த கேள்விக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் சுமுகமான உறவு இருந்து கொண்டிருப்பதாகவும் எங்கள் உறவு வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.