பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்துள்ளார் சிம்பு. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேநாளில் ஜெயம்ரவி நடித்துள்ள அகிலன் படமும் திரைக்கு வரலாம் என தெரிகிறது. இதனால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஜெயம்ரவியின் அகிலன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதும் சூழல் உருவாகி இருக்கிறது.