அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? |
கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்துள்ளார் சிம்பு. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேநாளில் ஜெயம்ரவி நடித்துள்ள அகிலன் படமும் திரைக்கு வரலாம் என தெரிகிறது. இதனால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஜெயம்ரவியின் அகிலன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதும் சூழல் உருவாகி இருக்கிறது.