ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்துள்ளார் சிம்பு. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேநாளில் ஜெயம்ரவி நடித்துள்ள அகிலன் படமும் திரைக்கு வரலாம் என தெரிகிறது. இதனால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஜெயம்ரவியின் அகிலன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதும் சூழல் உருவாகி இருக்கிறது.