புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து வசூலைக் குவித்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதையை மெருகேற்றும் வேலையில் படத்தின் இயக்குனர் சுகுமார் ஈடுபட்டுள்ளாராம்.
இப்படத்தின் முதல் பாகத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடம் கேட்டிருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல். இருப்பினும் இரண்டாம் பாகத்தில் அவருக்காக ஒரு முக்கிய போலீஸ் உயர் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்களாம். அதில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சுகுமார் தயாரித்த தெலுங்குப் படமான 'உப்பெனா' படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் தமிழ் நடிகரும், ஹிந்தி நடிகரும் நடித்தால் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என அல்லு அர்ஜுன் நினைக்கிறாராம். விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்தால் 'விக்ரம்' படத்திற்குப் பிறகு அவர் மீண்டும் பகத் பாசிலுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிப்பார்.