பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ருத்ரன். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ருத்ரன் படம் குறித்து இயக்குனர் கதிரேசன் கூறுகையில், இந்த படம் 60% ஆக்சன் காட்சியில் உருவாகியிருக்கிறது. இப்படத்திற்காக 10 கிலோ எடையை அதிகரித்து நடித்துள்ள ராகவா லாரன்ஸ், பின்னர் காட்சிகளுக்காக மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார். மேலும் இப்படத்தில் சரத்குமார் மற்றும் லாரன்ஸ் இடையே பல அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் இதுவரை லாரன்ஸ் நடித்த படங்களில் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாகவும், இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் வித்தியாசமானதாகவும் இப்படம் இருக்கும். சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய கதையில் உருவாகி இருக்கிறது. தீமை பிறப்பதில்லை, படைக்கப்படுகிறது என்பது தான் இப்படத்தில் டேக் லைன் என்று கூறுகிறார்.