காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து நடித்திருந்த சாணிக்காயுதம் படம் கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. என்றாலும் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் அவர் நடித்து கடந்த வாரத்தில் வெளியான வாஸி என்ற படம் வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தின் கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்த கீர்த்தி சுரேஷ், மலையாள சினிமாவில் தனக்கு ஒரு பெரிய ஹிட் படமாக அமையும் என்று இப்படத்தை தனது குடும்பத்தினர் மூலம் தயாரிக்கவும் செய்திருந்தார். ஆனால் அப்படம் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. என்றாலும் தற்போது தனது கைவசம் தமிழில் உதயநிதியுடன் நடித்து வரும் மாமன்னன் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடிக்கும் போலா சங்கர், நானியுடன் தசரா போன்ற படங்கள் இருப்பதால் இந்த படங்கள் தனக்கு கைகொடுக்கும் நம்பிக்கை வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.