ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

மதுரை : மதுரையில் 'ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ'... என்ற ஆன்மிக பாடலுடன் துவங்கிய 'இசையென்றால் இளையராஜா' இன்னிசை நிகழ்ச்சி மக்கள் வெள்ளத்தில் களைகட்டியது. நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ், சத்யா நிறுவனம் சார்பில் மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.
முதலில் 'ஜனனி, ஜனனி' பாடலை பாடி ரசிகர்களின் ஆரவார மழையில் நனைந்தார் இளையராஜா. அவரை தொடர்ந்து இளம், மூத்த பின்னணி பாடகர்கள் பலர் இளையராஜாவின் ஹிட் பாடல்களை பாடி அசத்தினர். இசைக்கு ஏற்ப ரசிகர்களுடன் மேடையில் இருந்த வண்ண விளக்குகளும் தாளம் போட்டு ரசித்து மின்னியது.நடிகர் வடிவேலுவும் பாட்டு பாடி அசத்தினார். யானைமலை அடிவாரத்தில் பொன்மாலை பொழுதில் மனதை மென்மையாக்கிய சந்தோஷத்தில் இசை ரசிகர்கள் ராஜாவின் பாடல்களை முணுமுணுத்தபடி வீடு சென்றனர்.




