அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மதுரை : மதுரையில் 'ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ'... என்ற ஆன்மிக பாடலுடன் துவங்கிய 'இசையென்றால் இளையராஜா' இன்னிசை நிகழ்ச்சி மக்கள் வெள்ளத்தில் களைகட்டியது. நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ், சத்யா நிறுவனம் சார்பில் மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.
முதலில் 'ஜனனி, ஜனனி' பாடலை பாடி ரசிகர்களின் ஆரவார மழையில் நனைந்தார் இளையராஜா. அவரை தொடர்ந்து இளம், மூத்த பின்னணி பாடகர்கள் பலர் இளையராஜாவின் ஹிட் பாடல்களை பாடி அசத்தினர். இசைக்கு ஏற்ப ரசிகர்களுடன் மேடையில் இருந்த வண்ண விளக்குகளும் தாளம் போட்டு ரசித்து மின்னியது.நடிகர் வடிவேலுவும் பாட்டு பாடி அசத்தினார். யானைமலை அடிவாரத்தில் பொன்மாலை பொழுதில் மனதை மென்மையாக்கிய சந்தோஷத்தில் இசை ரசிகர்கள் ராஜாவின் பாடல்களை முணுமுணுத்தபடி வீடு சென்றனர்.