காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
திருப்பூர் பனியன் தொழிற்சாலையின் பின்னணியில் ஏற்கெனவே சில தமிழ் படங்கள் உருவாகி இருக்கிறது. தற்போது உருவாகும் படத்திற்கு குதூகலம் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரேட் அண்ட் கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு தயாரிக்கிறார். காக்கி சட்டை, எதிர்நீச்சல், கொடி படங்களில் உதவி இயக்குனாக பணியாற்றிய உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார்.
கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவர் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கிறார். கவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, மன்மோகித், பிரேமி, எம்.சுகின்பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். பியான் சர்ராவ் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமாரின் உதவியாளர், மணிபெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் கூறியதாவது : இளைஞன் ஒருவன், தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை, எப்படி எதிர் கொள்கிறான் என்பது படத்தின் கதை. திருப்பூரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில், நகைச்சுவையுடன் படம் உருவாகிறது. என்கிறார்.