லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
திருப்பூர் பனியன் தொழிற்சாலையின் பின்னணியில் ஏற்கெனவே சில தமிழ் படங்கள் உருவாகி இருக்கிறது. தற்போது உருவாகும் படத்திற்கு குதூகலம் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரேட் அண்ட் கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு தயாரிக்கிறார். காக்கி சட்டை, எதிர்நீச்சல், கொடி படங்களில் உதவி இயக்குனாக பணியாற்றிய உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார்.
கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவர் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கிறார். கவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, மன்மோகித், பிரேமி, எம்.சுகின்பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். பியான் சர்ராவ் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமாரின் உதவியாளர், மணிபெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் கூறியதாவது : இளைஞன் ஒருவன், தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை, எப்படி எதிர் கொள்கிறான் என்பது படத்தின் கதை. திருப்பூரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில், நகைச்சுவையுடன் படம் உருவாகிறது. என்கிறார்.