மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த பாவனா, சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானார். அதன்பிறகு இங்கு சில படங்களில் நடித்த அவர் மலையாளத்திலும், கன்னடத்திலும் அதிக படங்களில் நடித்தார். 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆதம் ஜான்' என்ற மலையாளப் படத்தில் பிருத்விராஜுடன் நடித்திருந்தார். அதுதான் அவர் கடைசியாக நடித்த மலையாள படம்.
அதன்பிறகு சில கன்னட படங்களில் நடித்து வந்த பாவனா சொந்த காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், ஐந்து வருடங்களுக்குப் பிறகு 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் இந்தப் படத்தில் ஷராபுதீன், அனார்க்கலி நாசர், அர்ஜுன் அசோகன், செபின் பென்சன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்புக்கு வந்த பாவனாவை படப்பிடிப்பு குழுவினர் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். இதுதவிர மலையாள திரையுலகினர் பலரும் பாவனாவுக்கு வாழத்து தெரிவித்து வருகிறார்கள்.