அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த பாவனா, சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானார். அதன்பிறகு இங்கு சில படங்களில் நடித்த அவர் மலையாளத்திலும், கன்னடத்திலும் அதிக படங்களில் நடித்தார். 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆதம் ஜான்' என்ற மலையாளப் படத்தில் பிருத்விராஜுடன் நடித்திருந்தார். அதுதான் அவர் கடைசியாக நடித்த மலையாள படம்.
அதன்பிறகு சில கன்னட படங்களில் நடித்து வந்த பாவனா சொந்த காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், ஐந்து வருடங்களுக்குப் பிறகு 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் இந்தப் படத்தில் ஷராபுதீன், அனார்க்கலி நாசர், அர்ஜுன் அசோகன், செபின் பென்சன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்புக்கு வந்த பாவனாவை படப்பிடிப்பு குழுவினர் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். இதுதவிர மலையாள திரையுலகினர் பலரும் பாவனாவுக்கு வாழத்து தெரிவித்து வருகிறார்கள்.