நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
எம்ஜிஆர், கமல் முயற்சித்து செய்ய முடியாதை மணிரத்னம் முடித்து காட்டி உள்ளார். ஆம் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க இவர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அது கை கூடி வரவில்லை. ஆனால் இப்போது பொன்னியின் செல்வன் நாவலை படமாகவே எடுத்து முடித்துவிட்டார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் முதல்பாகம் செப்.,30ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் முதல்பாகத்தின் டீசரை வருகிற ஜூலை 7ம் தேதி, சோழ மன்னான தஞ்சாவூரில் பிரம்மாண்ட விழாவாக நடத்தி வெளியிட எண்ணி உள்ளார் மணிரத்னம்.