பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
அமராவதி கிரியேஷன்ஸ் சார்பில் ராம்கோவிந்த் தயாரிக்கும் படம் காத்திருந்தேன். புதுமுகம் சுரேஷ் பாரதி இயக்கி நடிக்கிறார். அவருடன் இன்னொரு நாயகனாக இளங்கோவன் நடிக்கிறார். சுஷ்மிதா நாயகியாக நடிக்கிறார். ரா.முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.பி.விஜய் இசையமைக்கிறார்.
படம் குறித்து சுரேஷ் பாரதி கூறியதாவது: முறையான காதல், கள்ளக்காதல், நல்ல காதல், என காதலில் பலவகை உண்டு. முற்றிலும் மாறுபட்ட முழுவதும் வேறுபட்ட காதலை சொல்ல உள்ளேன். இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் சொல்லப்படாத காதல் கதை இது.
காதலிக்கும் இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்று இந்த சமுதாயம் நினைக்கிறது. சாதி, மதம், பணம், அரசியல் எதுவும் காரணம் இல்லை. வேறு எதற்காக இவர்கள் கேரக்கூடாது என்பதை சஸ்பென்சாக இதுவரை யாரும் சொல்லப்படாத புதிய பரிணாமத்தோடு சொல்வதற்கு திரைக்கதையை வடிவமைத்துள்ளேன். கோவை, சேலம், கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் படமாக்கிறது. என்றார்.