25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சாமிடா, சவுகார் பேட்டை, பொட்டு, தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்களை இயக்கியவர் வி.சி.வடிவுடையான், சன்னி லியோன் நடிப்பில் வீரமாதேவி என்ற படம் தொடங்கப்பட்டு பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது. தற்போது ஜீவன், யாஷிகா ஆனந்த், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத் நடித்துள்ள பாம்பாட்டம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் இயக்கப்போகும் நாக பைரவா என்ற அடுத்த படத்தின் ஹீரோ அவர்தானாம். அதை அவரே அறிவித்திருக்கிறார். பிரபல இந்தி நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜுலை 1 முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க மும்பையில் முழு படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
படம் குறித்து வடிவுடையான் கூறியதாவது: 1970 காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி உள்ளேன். 2000 ராஜபாளைய நாய்களும் ஆயிரக்கணக்கான மாம்பா பாம்புகளும் படத்தில் இடம்பெற இருக்கின்றன. தமிழ், தெலுங்கு. ஹிந்தி மொழிகளில் தயாராகிறது. என்கிறார் வடிவுடையான்.