சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? |
சாய்பல்லவி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் தெலுங்கு படம் விராட பருவம். இதில் ராணா நக்சலைட்டாக நடித்திருக்கிறார். சாய்பல்லவி அவரது காதலியாக நடித்திருக்கிறார். படம் வருகிற 17ம் தேதி வெளிவருவதை தொடர்ந்து அதன் புரமோசன் பணிகளில் பிசியாக இருக்கிறார் சாய்பல்லவி.
ராணாவும், சாய்பல்லவியும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். சாய்பல்லவியை காண ஆயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியில் கூடுகிறார்கள். சாய் பல்லவியுடன் சேர்ந்து செல்பி எடுக்கும் ஆசையில் நெருக்கி அடித்துக்கொண்டு அவர் அருகில் வந்து விடுகிறார்கள். அப்படி ரசிகர்கள் வந்தபோது சாய் பல்லவியை அவர்களிடம் இருந்து பத்திரமாக காப்பாற்றினார் ராணா. நிகழ்ச்சியின்போது மழை பெய்யவே சாய் பல்லவிக்கு குடை பிடித்து நின்றார் ராணா.
இதுகுறித்து சாய்பல்லவியிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது, அவர் நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்திலும் எனக்கு ஒரு பவுன்சர்போல இருந்தார். ராணா மிகச்சிறந்த மனிதர், சிறந்த மனிதாபிமானி என்று கூறியிருக்கிறார் சாய்பல்லவி.