மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இரண்டு பாகங்களாகத் தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் மாதம் வெளியாகிறது. கடந்த வாரம் படத்தின் இயக்குனர் மணிரத்னம் பிறந்தநாளின் போது படம் பற்றிய அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்போது எதுவும் வெளியாகவில்லை.
இன்று படம் பற்றிய அப்டேட் தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கான டீசர் தற்போது உருவாகி வருகிறதாம். ஜுலை மாதம் பிரம்மாண்டமான விழாவாக நடத்தி டீசரை வெளியிட உள்ளார்களாம்.
'பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' போன்ற படங்களின் வரிசையில் இந்த 'பொன்னியின் செல்வன்' படமும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.