கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இரண்டு பாகங்களாகத் தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் மாதம் வெளியாகிறது. கடந்த வாரம் படத்தின் இயக்குனர் மணிரத்னம் பிறந்தநாளின் போது படம் பற்றிய அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்போது எதுவும் வெளியாகவில்லை.
இன்று படம் பற்றிய அப்டேட் தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கான டீசர் தற்போது உருவாகி வருகிறதாம். ஜுலை மாதம் பிரம்மாண்டமான விழாவாக நடத்தி டீசரை வெளியிட உள்ளார்களாம்.
'பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' போன்ற படங்களின் வரிசையில் இந்த 'பொன்னியின் செல்வன்' படமும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.