மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் கரண் ஜோஹரும் ஒருவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளன. அவர் ஒரு தமிழ் நடிகையின் தீவிர ரசிகன் என்பதை இப்போது தான் சொல்லியிருக்கிறார்.
ராணா டகுபட்டி, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படமான 'விராட பர்வம்' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த டிரைலரைப் பார்த்துவிட்டுத்தான் கரண் ஜோஹர் இப்படி தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் அற்புதமாக உள்ளது ராணா. பார்க்கக் காத்திருக்கிறேன். நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள். சாய் பல்லவியின் மிகப் பெரிய ரசிகன் நான்,” எனக் குறிப்பிட்டுள்ளார். கரணின் பாராட்டுக்கு, “நீங்கள் மிகவும் அன்பாவனர் சார், தாழ்மையுடன் மிக்க நன்றி,” என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
1990களில் நக்சலைட்களின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள 'விராட பர்வம்' படம் ஜுன் 17ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. பிரியாமணி, நந்திதா தாஸ், நவீன் சந்திரா, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.