துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பூர்ணா எனும் சாம்னா கசிம். அந்தப் பட இசை வெளியீட்டு விழாவின் போது பார்க்க அசின் போலவே இருக்கிறார் என நடிகர் விஜய்யால் பாராட்டப்பட்டவர். அதன் பின் நிறைய மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். பல டிவி ஷோக்களில் நடுவராகப் பங்கேற்றிருக்கிறார்.
பூர்ணா தனது வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்தி உள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, “குடும்பத்தினரது ஆசீயுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அதிகாரப்பூர்வமாக,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பூர்ணா திருமணம் செய்ய இருக்கும் நபர் பெயர் சானித் ஆசிப் அலி. துபாயில் தொழிலதிபராக உள்ளார். தற்போது இருவீட்டாரது சம்மதத்துடன் நிச்சயம் நடந்துள்ளது.
மலையாளத்திலிருந்து வந்து இங்கு நம்பர் 1 நடிகையாக உள்ள நயன்தாரா திருமண அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் பூர்ணா அவரது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.