'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
சென்னை : தமிழ் சினிமாவில் பன்முக படைப்பாளி டி.ஆர். எனும் டி.ராஜேந்தர். நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். அரசியலிலும் தனது திறமையை நிரூபித்தவர். கடந்தவாரம் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவரை வெளிநாடு கூட்டிச் சென்று சிகிச்சை செய்யும் எண்ணத்திலும் உள்ளார் அவரது மகனும், நடிகருமான சிம்பு.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள டி.ராஜேந்தரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சையையும் அளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.