கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக விஜய்யின் 67 வது படத்தை இயக்கப் போகிறார். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சூர்யா நடிப்பில் இயக்கவிருந்த இரும்புக்கை மாயாவி படம் கைவிடப்பட்டது ஏன் என்பது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் இரும்புக்கை மாயாவி படத்திற்காக ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த போது அந்த படத்தை இயக்குவதற்கான தைரியம் எனக்கு இல்லாதது போன்று உணர்ந்தேன். அதன் காரணமாகவே அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம், இந்தப் படத்தை இப்போதைக்கு என்னால் இயக்க முடியுமா என சந்தேகம் இருக்கிறது. அதனால் இன்னும் சில படங்களை இயக்கி விட்டு அதன் பிறகு இந்த படத்தை தொடங்கலாம் என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதிக்கவே சூர்யா நடிக்க இருந்த இரும்புக்கை மாயாவி படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் லோகேஷ். தற்போது கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருக்கும் நிலையில் விரைவில் இரும்புக்கை மாயாவி படத்தில் அவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது.