பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக விஜய்யின் 67 வது படத்தை இயக்கப் போகிறார். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சூர்யா நடிப்பில் இயக்கவிருந்த இரும்புக்கை மாயாவி படம் கைவிடப்பட்டது ஏன் என்பது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் இரும்புக்கை மாயாவி படத்திற்காக ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த போது அந்த படத்தை இயக்குவதற்கான தைரியம் எனக்கு இல்லாதது போன்று உணர்ந்தேன். அதன் காரணமாகவே அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம், இந்தப் படத்தை இப்போதைக்கு என்னால் இயக்க முடியுமா என சந்தேகம் இருக்கிறது. அதனால் இன்னும் சில படங்களை இயக்கி விட்டு அதன் பிறகு இந்த படத்தை தொடங்கலாம் என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதிக்கவே சூர்யா நடிக்க இருந்த இரும்புக்கை மாயாவி படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் லோகேஷ். தற்போது கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருக்கும் நிலையில் விரைவில் இரும்புக்கை மாயாவி படத்தில் அவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது.