பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு ரஜினியின் 169வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் 'பீஸ்ட்' பட வெளியீட்டிற்கு முன்பே வெளிவந்தது. படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்த தகவல் இல்லை. இப்படத்திற்கான கதையை ரஜினிகாந்த்தே எழுதிவிட்டாராம். நெல்சனை திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கச் சொல்லி இருந்தார்களாம்.
'பீஸ்ட்' படம் முடிந்த பின் திரைக்கதை விவாதம் நடைபெற்றுள்ளது. அதன்பின் நெல்சன் சொன்ன திரைக்கதை ரஜினிகாந்துக்கு திருப்தி தரவில்லையாம். அதனால், ரஜினிகாந்த் அவரது ஆஸ்தான இயக்குனரான கேஎஸ் ரவிக்குமாரிடம் படத்தின் திரைக்கதையை எழுதித் தரக் கேட்டுள்ளாராம். அதை தற்போது ரவிக்குமார் எழுதி வருவதாகத் தகவல். அதன் காரணமாக படப்பிடிப்பு இன்னும் கொஞ்ச நாட்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
திரைக்கதை எழுதி முடித்த பின்தான் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகளின் தேர்வு நடக்கும் எனத் தெரிகிறது.