இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
தமிழ் சினிமாவில் கடந்த 27 வருடங்களாக கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் விஜய். அவருக்கும் இன்றைய முன்னணி கதாநாயகனாக சிவகார்த்திகேயனுக்கும் இடையே சுமூகமான நட்பு இல்லாமல் இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் சிவகார்த்திகேயனை விமர்சித்துப் பேசினார் அருண் விஜய் என்ற குற்ச்சாட்டு உண்டு.
இதனிடையே, இன்று அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய்க்கு சிவகார்த்திகேயன் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆர்னவ் சமீபத்தில் வெளிவந்த 'ஓ மை டாக்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் ஆர்னவிற்கு சிகார்த்திகேயன், “இனிய பிறந்தநாள் தம்பி. 'ஓ மை டாக்' படத்தில் உங்களது நடிப்பை ரசித்தேன். உங்களது நடிப்பிற்கும், படிப்பிற்கும் எனது வாழ்த்துகள்,” எனப் பாராட்டியிருந்தார்.
அதற்கு அருண் விஜய், “உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பிரதர். ஆர்னவ்வை வாழ்த்தியதில் நீங்கள் உண்மையில் அன்பானவர். இதை நிச்சயம் ஆர்னவ்விடம் தெரியப்படுத்துகிறேன்,” என்று நன்றி தெரிவித்துள்ளார்.
இருவருக்குமான பிரச்சினை தீர்ந்து சுமூகமான நட்பில் வந்ததற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.