பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கத்திமேல் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தை இன்றைய இளம் ரசிகர்கள் ரசிக்கும்படியாக கொடுத்ததில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவனை பாராட்டியுள்ளார் நடிகை சிம்ரன். இதுபற்றி அவர் கூறும்போது, “விக்னேஷ் சிவன் மீண்டும் சாதித்திருக்கிறார்.. ஒரு சிக்கலான கதையை சரியான விதத்தில் கொடுத்திருக்கிறார்.. விக்னேஷ் சிவனால் மட்டுமே இது முடியும்.. ஒரு முழுநீள பொழுதுபோக்கு படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.. விக்னேஷ் சிவனுக்கும் அவரது குழுவிற்கும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார் சிம்ரன்.




