லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ராக்கி படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியுள்ள சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. முதன் முறையாக இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிகராக மாறியுள்ளதுடன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது..
ஆனால் ஏ சான்றிதழ் வழங்கியது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தில் பல காட்சிகளை சென்சாரில் வெட்ட சொல்லிவிட்டார்கள் என்பதற்காக தான் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் சென்சார் இந்த செயலுக்கு தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஏற்கனவே ட்ரெய்லரில் வெளியாகி ரசிகர்களால் பார்க்கப்பட்ட காட்சி படத்தில் இருக்காது என்பதுதான் துரதிர்ஷ்டம்.. அது வெறும் டைரக்டர் கட் ஆகவே போய்விடும்” என்று கூறியுள்ளார்.