மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த சரத்குமார் தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது அவர் கைவசம் 10 படங்களுக்கு மேல் உள்ளன. இதில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் அவரது தந்தையாக நடிக்கிறார் சரத்குமார். பவர்புல்லான கதையில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருப்பதாக தெரிவித்துள்ள சரத்குமார், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
அதோடு நான் நடித்த சூர்யவம்சம் படத்தின் 250வது நாள் விழா சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது. அப்போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நான் அந்த மேடையில் பேசி இருந்தேன். அது இப்போது உண்மையிலேயே நடந்திருக்கிறது. இதை நான் விஜய் இடத்திலும் தெரிவித்தபோது, நீங்கள் அப்போது பேசியது இன்னமும் என் நினைவில் உள்ளது என்று தெரிவித்தார். அந்தளவுக்கு விஜய்யின் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று நான் அப்போதே கணித்தேன். அது அப்படியே நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.