மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பெரம்பலுார் : 'டிவி' சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரை, போலீசார் விசாரிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா, 29; தனியார் 'டிவி' சீரியலில் நடித்து வந்த இவர், 2020 டிச., 9ல் செம்பரம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை, அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு துாண்டியதாக, அவரது தந்தை காமராஜ் கொடுத்த புகார்படி, நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சித்ராவின் கணவரை கைது செய்தனர்.
கடந்த 2021 மார்ச் 3ல், ஜாமினில் அவர் வெளியில் வந்தார். நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சகோதரி சரஸ்வதி உள்ளிட்ட பலரிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரித்தனர். சென்னை, பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள், சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.