காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா |
ரஜினிகாந்த்தின் 169 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை ரம்யாகிருஷ்ணன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த கதாபாத்திரம் கதாநாயகியா அல்லது வில்லியா என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் படையப்பா நீலாம்பரி ஸ்டைலில் நெகட்டிவ் வேடத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.