தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
தமிழில் சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன், கன்னடத்தில் இயக்கிய படம் ரணதந்திரா. தற்போது அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் இயக்கிய ரணதந்திராவை மாஸ்க் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜய ராகவேந்திரா, மேக்னா நாயுடு, ஐஸ்வர்யா, விஷால் ஹெக்டே, மது உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் கே நாராயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம் கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி ஆதிராஜன் கூறியதாவது: சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை போன்ற இடங்களில் ஒரே மாதிரியாக மர்மமான முறையில் இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். அது கொலையா?!தற்கொலையா?! இல்லை அமானுஷ்ய சக்தியின் ஆட்டமா? என்று முடிவு செய்ய முடியாமல் காவல்துறை தடுமாறுகிறது. தீவிரமாக விசாரிக்கும்போது அதன் பின்னணியில் இருக்கும் காரணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
பெண்களுக்கு தரப்படும் அதீத சுதந்திரம் அவர்களை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி விடுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத கோணத்தில் இருக்கும். த்ரில்லர் பட ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக இருக்கும். என்றார்.