வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் | தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் |
2009ல் வெண்ணிலா கபடி குழு மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ராட்சசன் படம் மூலம் அதிக அளவில் ரசிகர்களை சம்பாதித்தார். அதற்கடுத்ததாக அவரது படங்கள் மீது ஓரளவு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது அதனால் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் நேரடி தொடர்பில் இருந்து வந்த விஷ்ணு விஷால், தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய படங்களை பற்றியும் தன்னுடைய சொந்த விஷயங்களை பற்றியும் அவ்வப்போது அப்டேட் செய்து வந்தார்.
ஆனால் தற்போது கொஞ்ச காலத்திற்கு சோசியல் மீடியாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.. வாழ்க்கைக்கு ஒய்வு ரொம்ப முக்கியம் என அவர் இதற்கான காரணமாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் சமீபகாலமாக விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி கொடுத்த மோசடி புகாரும் அதுதொடர்பாக சோசியல் மீடியாவில் அவரிடம் எழுப்பப்படும் கேள்விகளும், பதிவிடப்படும் கருத்துக்களும் அவருக்கு தேவையில்லாத சங்கடத்தையும், மன உளைச்சலையும் கொடுத்திருப்பதால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.