ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களாலும் அறியப்பட்டவர் தெலுங்கு ஹீரோ நானி. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் ஒரு இளம் ஹீரோ. அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஷியாம் சிங்க ராய்' படம் வெற்றி மட்டும் பெறாமல் நல்ல வரவேற்பையும் பெற்றது.
நானி தற்போது நடித்துள்ள 'அன்டே சுந்தரினிக்கி' தெலுங்குப் படம் தமிழில் 'அடடே சுந்தரம்' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. 'நேரம், ராஜா ராணி,' படங்களில் கதாநாயகியாக நடித்த நஸ்ரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் முக்கிய ஹீரோக்களின் படங்கள் பான்--இந்தியா படங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் 'பான்--இந்தியா' படம் பற்றி புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார் நானி.
“ஒரு தெலுங்குப் படத்தை பல மொழிகளில் டப்பிங் செய்து மற்ற மாநிலங்களிலும் வெளியிடுவதை பான்--இந்தியா என்று சொல்வதிலும், என்னை பான்--இந்தியா ஹீரோ என்று சொல்வதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவின் மற்ற மூலைகளிலிருந்தும் மக்கள் அந்தப் படங்களைப் பார்க்கும் வகையில் உருவாக்க வேண்டும். குறைந்த பட்சம் ஓடிடி தளங்களிலாவது அவர்களைப் பார்க்க வைக்க வேண்டும். ஒரு படத்தை இந்தியாவின் சாத்தியமான எல்லா மொழிகளிலும் வெளியிடுவதை விட அந்தப் படத்தின் கருத்தாக்கம் பேசப்படும் விதத்தில் படத்தை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகரான துல்கர் சல்மான் கூட “பான்--இந்தியா என்கிற வார்த்தை எரிச்சலூட்டுகிறது,” என்று சமீபத்தில் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.