சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை ராம் இயக்கி வருகிறார். அஞ்சலி, சூரி முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ்கோடி, கேரளாவின் வண்டிப்பெரியார், வாகமன், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு இப்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். மற்ற பணிகள் விரைவில் துவங்குகின்றன. தமிழ், மலையாளத்தில் படம் வெளியாக உள்ளது.
இதுபற்றி சூரி கூறுகையில், ‛‛இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் தன்னுடைய ரயில் பயணங்கள் மறக்க முடியாத நிகழ்களாக இருக்கும். அதுபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது. பிரியா விடை பெறுகிறேன்'' என்றார்.