பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நிலையில் தற்போது நாக சைதன்யாவுக்கும் அபராதம் விதித்துள்ளனர்.
நாக சைதன்யா சொகுசு காரில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் பயணம் செய்தார். அவரது காரை வழிமறித்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்துள்ளனர். காருக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாத அளவிற்கு கண்ணாடியில் கருப்பு ஸடிக்கர் ஒட்டியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். நாக சைதன்யா காரில் அப்படியான கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த ஸ்டிக்கரை நீக்கிய போலீசார். நாக சைதன்யாவுக்கு 715 ரூபாய் அபராதமும் விதித்தனர். அதனை கட்டிவிட்டு சென்றார் நாக சைதன்யா. அல்லு அர்ஜூன், மஞ்சு மனோஜ் ஆகியோருக்கும் இதே குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




