சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு | நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் |
ஒரு காலத்தில் இயக்குனர்கள் அவர்களுக்கு வசதியாக இருக்கும் கதைகளைத்தான் படமாக்குவார்கள். ஆக்ஷன், காதல், காமெடி இப்படி தங்களுக்கு எது வருமோ அந்தக் கதையை எடுத்துக் கொண்டு அதில் படத்துக்குப் படம் ஏதாவது மாற்றம் செய்தோ செய்யாமலோ வெற்றி பெறுவார்கள்.
அந்த பாதுகாப்பான வழியை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது மூன்றாவது படத்திலும் தொடர்ந்திருப்பது ஆச்சரியம்தான். அதுவும் விஜய் போன்ற ஒரு ஹீரோ கிடைத்தும், அவருக்காக கதை செய்யாமல் தனக்கு எது வருமோ அதைச் செய்திருக்கிறார். நெல்சனின் 'கடத்தல் கதை' என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் விஜய்யும் பணயக் கைதியாக 'பீஸ்ட்' படத்தில் சிக்கியிருக்கிறார் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
நெல்சன் தான் முதலில் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் போதைப் பொருள் கடத்தல், இரண்டாவது படமான 'டாக்டர்' படத்தில் சிறுமிகள் கடத்தல் ஆகியவற்றை வைத்து கதை அமைத்திருந்தார். இப்போது விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் பிரம்மாண்ட ஷாப்பிங் மாலுக்குள் இருந்தவர்களை பணயக் கைதிகளாக கடத்தி வைத்திருப்பதை வைத்து கதை அமைத்திருக்கிறார்.
முதலிரண்டு படங்களிலும் 'கடத்தல்' சமாச்சாராம் நெல்சனை வெற்றியைக் கடக்க வைத்திருக்கிறது. அந்த ராசி 'பீஸ்ட்' படத்திலும் தொடருமா என்பதற்கு இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.