நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
ஒரு காலத்தில் இயக்குனர்கள் அவர்களுக்கு வசதியாக இருக்கும் கதைகளைத்தான் படமாக்குவார்கள். ஆக்ஷன், காதல், காமெடி இப்படி தங்களுக்கு எது வருமோ அந்தக் கதையை எடுத்துக் கொண்டு அதில் படத்துக்குப் படம் ஏதாவது மாற்றம் செய்தோ செய்யாமலோ வெற்றி பெறுவார்கள்.
அந்த பாதுகாப்பான வழியை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது மூன்றாவது படத்திலும் தொடர்ந்திருப்பது ஆச்சரியம்தான். அதுவும் விஜய் போன்ற ஒரு ஹீரோ கிடைத்தும், அவருக்காக கதை செய்யாமல் தனக்கு எது வருமோ அதைச் செய்திருக்கிறார். நெல்சனின் 'கடத்தல் கதை' என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் விஜய்யும் பணயக் கைதியாக 'பீஸ்ட்' படத்தில் சிக்கியிருக்கிறார் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
நெல்சன் தான் முதலில் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் போதைப் பொருள் கடத்தல், இரண்டாவது படமான 'டாக்டர்' படத்தில் சிறுமிகள் கடத்தல் ஆகியவற்றை வைத்து கதை அமைத்திருந்தார். இப்போது விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் பிரம்மாண்ட ஷாப்பிங் மாலுக்குள் இருந்தவர்களை பணயக் கைதிகளாக கடத்தி வைத்திருப்பதை வைத்து கதை அமைத்திருக்கிறார்.
முதலிரண்டு படங்களிலும் 'கடத்தல்' சமாச்சாராம் நெல்சனை வெற்றியைக் கடக்க வைத்திருக்கிறது. அந்த ராசி 'பீஸ்ட்' படத்திலும் தொடருமா என்பதற்கு இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.