மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஐதராபாத் : ஐதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா உட்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர்.
திரை பிரபலங்கள், அதிகாரிகளின் வாரிசுகள் என பலரிடமும் இப்போது போதை பொருட்களின் புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனும் இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ரேடிசன் புளூ ஐந்து நட்சத்திர ஹோட்டல் பப்பில் நேற்று (ஏப்ரல் 3) அதிகாலையில் நடந்த பார்ட்டியில் கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.