Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உணவருந்தி உரையாட காத்திருக்கும் சரத்குமார்; ரசிகர்களுக்கு அழைப்பு

03 ஏப், 2022 - 03:51 IST
எழுத்தின் அளவு:
Sarathkumar-waiting-to-the-lunch-with-fans

நடிகர் சரத்குமார் தற்போது போர்த்தொழில், பரம்பொருள் மற்றும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரசிகர்களுடன் மதிய உணவு சாப்பிட விரும்பிய சரத்குமார், ‛சரத்துடன் மதிய உணவு' என்ற பெயரில் நடத்திட திட்டமிட்டுள்ளார். ரசிகர்கள், நலம் விரும்பிகளுடன் உணவருந்தி, உரையாட காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் விருப்பமுள்ளவர்கள் தங்களின் விபரங்களை மெயில் அனுப்ப வேண்டும் என்றும், அதில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுடன் உரையாடலுடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக கூறியுள்ளார். இது தொடர்பான விபரங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு: என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதைகளை சற்று நினைவுகூறும் போது, வீடுகளுக்கு பத்திரிகை போடும் இளைஞனாக, சிறு பணியில் துவங்கிய பயணம், எத்தனை எத்தனையோ போராட்டங்கள், வேதனைகள், வலிகளுடன் இன்று நான் இருக்கும் உயரத்திற்கு அழைத்து வந்துள்ளது. இந்த இடத்தை அடைய எத்தனை நீண்ட தூரம் பயணித்துள்ளேன் என திரும்பி பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.

இத்தருணத்தில் என்னை விமர்சித்து, ஊக்குவித்து, ஆதரித்து ஏற்றுக்கொண்ட உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்க்கை பயணத்தில் பொதுவாக பலரை சந்தித்திருக்கிறேன். என்னை சந்திக்க விரும்பிய பலரை சூழல் காரணமாக சந்திக்க இயலாமல் இருந்திருக்கிறேன். தற்போது, தூரத்தில் இருந்து என்னை கண்டவர்களை, அருகில் கண்டு உபசரிக்க ஓர் வாய்ப்பாக "சரத்துடன் மதிய உணவு" திட்டமிட்டுள்ளேன். உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்! வாருங்கள், சந்திப்போம்!!. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாளவிகாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த சுந்தர்.சி!மாளவிகாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த ... அஜித்தின் வலிமை செய்த சாதனை! போனிகபூர் வெளியிட்ட தகவல்!! அஜித்தின் வலிமை செய்த சாதனை! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)