நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'டிஎன்ஏ' ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறது: அக்ஷரா ஹாசன் புகார் | மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர் | பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா | பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் | ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? |
கேரளாவை சேர்ந்தவர் தான் என்றாலும் நடிகை நிவேதா தாமஸ் முழுக்க முழுக்க தனது கவனத்தை செலுத்தி வருவது எல்லாம் தெலுங்கு திரையுலகில் தான். கடந்த எட்டு வருடங்களை கணக்கில் எடுத்து பார்த்தால், தமிழில் பாபநாசம் மற்றும் தர்பார் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதேபோல 2014ல் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மணிரத்னம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது மலையாளத்தில் எந்தாடா ஷாஜி என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நிவேதா தாமஸ். இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா என இரண்டு கதாநாயகர்கள் நடிக்கின்றனர். காட்பை பாபு என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோக்கள் இருவருடன் நிவேதா தாமசுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.