சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கேரளாவை சேர்ந்தவர் தான் என்றாலும் நடிகை நிவேதா தாமஸ் முழுக்க முழுக்க தனது கவனத்தை செலுத்தி வருவது எல்லாம் தெலுங்கு திரையுலகில் தான். கடந்த எட்டு வருடங்களை கணக்கில் எடுத்து பார்த்தால், தமிழில் பாபநாசம் மற்றும் தர்பார் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதேபோல 2014ல் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மணிரத்னம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது மலையாளத்தில் எந்தாடா ஷாஜி என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நிவேதா தாமஸ். இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா என இரண்டு கதாநாயகர்கள் நடிக்கின்றனர். காட்பை பாபு என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோக்கள் இருவருடன் நிவேதா தாமசுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.