புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
உலக புகழ்பெற்ற சின்னத்திரை தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ். எச்பிஓ சேனலில் 7 சீசன்களாக வெளியான இந்த தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தொடரில் நடித்த அனைவரும் இப்போது உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவர்ந்த நட்சத்திரங்கள் ஆகிவிட்டனர். சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இந்த தொடரின் கடைசி சீசன் மதர் ஆப் டிராகன் கொல்லப்படுவதோடு முடிந்தது.
அதனால் இந்த கதையை அப்படியே தொடர முடியாது என்பதால் புதிய கதையாக உருவாக்கி உள்ளனர். கேம் ஆப் த்ரோன்ஸ் கதையின் தொடர்ச்சியாக ஒரு கதையை உருவாக்கி அதனை ஹவுஸ் ஆப் டிராகன் என்ற பெயரில் தயாரித்து வருகிறார்கள். இதில் முற்றிலும் புதியவர்கள் நடிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி முதல் எச்பிஆ சேனலில் ஒளிபரப்பாகிறது. அதன்பிறகு டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.