மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வலிமை படத்திற்கு பிறகு அஜித்தின் 61வது படம் விரைவில் தொடங்க இருக்கிறது. வலிமை படத்தின் தாமதம், படப்பிடிப்பில் நடந்த விபத்து, படம் பற்றிய இருவித விமர்சனம் என வலிமை அஜித்துக்கு கொஞ்சம் வலி தந்த படமாகத்தான் அமைந்தது. அதோடு அஜித்துக்கு இதுவரை 7 ஆபரேஷன்கள் வரை நடந்துள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டும், 61வது படம் எந்த சிக்கலும் இன்றி நிறைவடைய வேண்டும், மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று மனைவி ஷாலினியின் வேண்டுதல்படியும் அஜித் பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது குறித்து படங்கள் இணையதளத்தில் வெளியானது.
ஆனால் இந்த வழிபாட்டுக்கு முன்னதாக அஜித் 15 நாட்கள் வரை பாலக்காடு பகுதியில் உள்ள பிரபலமான ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றில் தங்கியிருந்து இயற்கை வைத்தியம் செய்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த மையத்தில் சிகிச்சை பெறுகிறவர்கள் கடைசி நாளில் கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.