ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்த 'மாநாடு' படம் கடந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் முக்கியமான ஒரு படம்.
படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், நாயகன் சிம்புவின் அப்பா டிஆருக்கும் இடையில் படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. அந்த சமயத்தில் படத்தின் சக்சஸ் மீட் அதன்பின் படத்தின் 50வது நாள் விழா ஆகிய நிகழ்வுகளில் சிம்பு கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
படத்தின் 100வது நாளில் தியேட்டருக்குச் சென்று சிம்பு ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் சௌத்' விருது வழங்கும் விழா ஒன்றில் 'மாநாடு' படத்திற்கு 'சென்சேஷனல் பிளாக்பஸ்டர் ஆப் த இயர்' விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் சிம்பு, எஸ்ஜே சூர்யா, நடிகை கல்யாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றனர். தயாரிப்பாளரும், நாயகனும் மீண்டும் இணைந்து விருது வாங்கியது திரையுலகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.
'மாநாடு' படம் வெற்றி பெற்றதுமே ரசிகர்கள் அதன் 2ம் பாகம் வேண்டும் என்று கேட்டனர். அது நிறைவேறுமா என்பது குறித்து படக்குழுவினர்தான் தெரிவிக்க வேண்டும்.