மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தனது கணவர் நடிகர் தனுஷுடனான விவாகரத்து குறித்து அறிவித்த பின்பு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா. பத்து வருடங்களுக்கு முன் தனுஷ் நடித்த '3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, அதன்பின் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது முசாபிர் என்கிற ஆல்பத்தை மூன்று மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளதுடன் இந்த சந்திப்பு மிகுந்த உற்சாகத்தை தருகிறது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ஒன்றை இயக்க போகிறார் என்றும் அதற்காகத்தான் அவரை சந்தித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இதில் இன்னும் கூடுதலாக லாரன்ஸ் நடிப்பதாக இருந்த துர்கா படத்தைத்தான் ஐஸ்வர்யா இயக்கப்போகிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் தான் இயக்குவதாக கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களது பணிச்சுமை காரணமாக இந்தப்படத்தை இயக்குவதில் இருந்து நாங்கள் விலகிக்கொள்கிறோம் என சமீபத்தில்தான் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் ராகவா லாரன்ஸை ஐஸ்வர்யா சந்தித்திருப்பதால், அது துர்கா படத்துடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. மேலும் லாரன்சை சந்தித்தபோது தற்போது தான் இயக்கியுள்ள முசாபிர் என்கிற ஆல்பத்தையும் அவருக்கு ஐஸ்வர்யா போட்டுக்காட்ட, அதை பார்த்து லாரன்ஸ் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.