ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தனது கணவர் நடிகர் தனுஷுடனான விவாகரத்து குறித்து அறிவித்த பின்பு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா. பத்து வருடங்களுக்கு முன் தனுஷ் நடித்த '3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, அதன்பின் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது முசாபிர் என்கிற ஆல்பத்தை மூன்று மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளதுடன் இந்த சந்திப்பு மிகுந்த உற்சாகத்தை தருகிறது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ஒன்றை இயக்க போகிறார் என்றும் அதற்காகத்தான் அவரை சந்தித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இதில் இன்னும் கூடுதலாக லாரன்ஸ் நடிப்பதாக இருந்த துர்கா படத்தைத்தான் ஐஸ்வர்யா இயக்கப்போகிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் தான் இயக்குவதாக கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களது பணிச்சுமை காரணமாக இந்தப்படத்தை இயக்குவதில் இருந்து நாங்கள் விலகிக்கொள்கிறோம் என சமீபத்தில்தான் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் ராகவா லாரன்ஸை ஐஸ்வர்யா சந்தித்திருப்பதால், அது துர்கா படத்துடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. மேலும் லாரன்சை சந்தித்தபோது தற்போது தான் இயக்கியுள்ள முசாபிர் என்கிற ஆல்பத்தையும் அவருக்கு ஐஸ்வர்யா போட்டுக்காட்ட, அதை பார்த்து லாரன்ஸ் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.