Advertisement

சிறப்புச்செய்திகள்

எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டு நல்ல வாய்ப்புகளை கோட்டை விட்டுவிட்டேன் : வருத்தப்பட்ட ஆரி

14 மார், 2022 - 12:05 IST
எழுத்தின் அளவு:
I-loss-two-good-offers-says-Aari

கள்ளன் பட இசை வெளியீட்டு விழாவில் பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி அர்ஜுனா கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது : "எவ்வளவு நல்ல படம் எடுத்தாலும் அதை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்தால் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். நேரம் என்பது இங்கே ரொம்ப முக்கியம். அப்படி நேரத்தை கடைப்பிடிக்க தவறியதால் தான், நான் மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றை இழந்தேன்.

சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. மறுநாள் அவரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் எனது உறவினர்கள் தங்களது வீட்டு திருமணத்திற்காக பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தார்கள். அதனால் குறித்த சமயத்தில் அவரை சந்திக்க முடியவில்லை. அதன் பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு அமையாமலே போய் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி நடித்து மிகப்பெரிய ஹிட்டாகி தேசிய விருதும், ஒரு சிறந்த நடிகரையும் நமக்கு தந்தது. அந்தப் படம்தான் தென்மேற்கு பருவக்காற்று..

அதேபோல நான் ரெட்டச்சுழி படத்தில் நடித்த சமயத்தில் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் சந்திரா.. மிகவும் கோபக்காரர். அப்போது எங்களுக்குள் சண்டைகள் வருவதுண்டு. ஒரு சமயம் இந்த கள்ளன் படத்தின் கதையை என்னிடம் அவர் கூறியிருக்கிறார். ஆனால் நான் நெடுஞ்சாலை படத்தின் கதையை போலவே இருப்பதாக சொல்லி இதில் நடிக்க மறுத்துவிட்டதாக அவர் இப்போது கூறுகிறார்..

ஆனால் அப்படி கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. அதேசமயம் நாம் இருவரும் இணைந்து ஒன்றாக பணியாற்றினால் நமக்குள் கட்டிப்புரண்டு சண்டை போடும் அளவுக்கு சச்சரவுகள் வரும். அதனால் உங்கள் படத்தில் பணியாற்ற மாட்டேன் என்று வேடிக்கையாக நான் சொன்னது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இருந்தாலும் இந்த கள்ளன் படத்தில் நான் நடித்து இருக்க வேண்டும் என இப்போது நினைக்கிறேன். அப்படி மறுத்ததற்காக இந்த மேடையிலேயே இயக்குனர் சந்திராவிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் ஆரி அர்ஜுனா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கமல்ஹாசன் வாழ்த்தும், லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியும்…கமல்ஹாசன் வாழ்த்தும், லோகேஷ் ... சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய் சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in