பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் தமிழில் வெளியாகும் அதேநாளில் ஆந்திரா, தெலுங்கானாவிலும் வெளியாகவுள்ளது. சென்னையில் இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதையடுத்து ஐதராபாத்திலும் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருடன் தெலுங்கு நடிகர் ராணா, தெலுங்கு இயக்குனர் பொய்யா பட்டி ஸ்ரீனு உள்பட பலர் கலந்து கொண்டு உள்ளார்கள்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பொய்யா பட்டி ஸ்ரீனு, சூர்யாவின் படங்களை தெலுங்கு மக்கள் தமிழ் படம் போன்று நினைப்பதில்லை. தெலுங்கு படமாகவே நினைத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தெலுங்கு சினிமா ரசிகர்கள் ரஜினிகாந்த் படத்திற்கு பிறகு சூர்யா படத்துக்கு தான் அதிகப்படியான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் என்று பேசியுள்ளார்.
அதோடு பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படம் மார்ச் 11-ம் தேதி வெளியாகிறது. ஆனபோதும் அதற்கு முந்தின நாளில் ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகப்படியான திரையரங்குகளில் சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படமும் வெளியாக உள்ளது.