மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இந்தியத் திரையுலகத்தில் தென்னிந்தியப் படங்கள் மீதான பார்வையை முற்றிலுமாக மாற்றி வசூல் ரீதியாக பெரிய சாதனையைப் படைத்த படங்கள் 'பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2'. ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் ராஜமவுலி, பிரபாஸ் ஆகிய இருவருக்கும் இந்திய அளவில் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
பிரபாஸ் நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் 'ராதே ஷ்யாம்'. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படத்திற்காக கடந்த சில தினங்களாக மும்பையில் பல்வேறு பிரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது 'பாகுபலி 3' வருவதற்கான வாய்ப்புகள் ஏதும் இருக்கிறதா என்ற கேள்வி பிரபாஸிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு, “நானும் ராஜமவுலியும் நல்ல நண்பர்கள். அடிக்கடி எங்களது படங்களைப் பற்றி விவாதிப்போம். நிச்சயம் ஏதாவது ஒன்று நடக்கும். நானும் ராஜமவுலியும் 'பாகுபலி'யை விட்டு விலகவில்லை. யாருக்கு தெரியும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று பதிலளித்துள்ளார் பிரபாஸ்.
அவரது பதில் மூலம் எதிர்காலத்தில் 'பாகுபலி 3' வருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது. தற்போது பல பிரம்மாண்ட சரித்திரப் படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதால், அவற்றை மிஞ்சும் அளவிற்குத்தான் மூன்றாம் பாகத்தை எடுக்க நினைப்பார் ராஜமவுலி.