என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாறன்'. இப்படம் அடுத்த வாரம் மார்ச் 11ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் டிரைலர் யு டியுபில் வெளியிடப்பட்டது. அதற்கடுத்து தொடர்ந்து பல்வேறு விதமான பிரமோஷன்களை தயாரிப்பு நிறுவனமும், ஓடிடி நிறுவனமும் சமூக வலைத்தளங்களில் நடத்தி வருகின்றன.
ஆனால், படத்தின் நாயகனான தனுஷ் அவற்றிலிருந்து விலகியே இருக்கிறார். டுவிட்டர் தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுடனான பிரிவு குறித்த அறிக்கைதான் அவரது கடைசி பதிவாக உள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் பதிவிட்டதுதான் அதில் கடைசி பதிவு.
'மாறன்' படம் ஓடிடியில் வெளியாவதால் விலகி இருக்கிறாரா, அல்லது தனிப்பட்ட காரணங்களால் விலகி இருக்கிறாரா என்பது குறித்து திரையுலகினரும், தனுஷ் ரசிகர்களும் குழம்பி இருக்கிறார்கள். தனுஷ் நடித்த கடைசியாக வெளிவந்த தமிழ்ப் படமான 'ஜகமே தந்திரம்', ஹிந்திப் படமான 'அத்ராங்கி ரே', இரண்டுமே ஓடிடி வெளியீடுகள்தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. என்ன இருந்தாலும் 'மாறன்' படத்தின் நாயகனான அவர் பட வெளியீடு குறித்து எந்த ஒரு பதிவும் போடாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.