மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கதாநாயகனாக சிம்புவுக்கு கைகொடுத்த படமாக மட்டுமல்ல, ஹீரோ சிம்புவா, இல்லை எஸ்ஜே சூர்யாவா என கேட்கும் அளவுக்கு இருவருக்குமே முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு
இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை மற்றும் தெலுங்கு டப்பிங் உரிமை இரண்டையும் நடிகர் ராணாவின் தந்தை தனது சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பாக கைப்பற்றியுள்ளார். அதேசமயம் டப்பிங் செய்வதை விட ரீமேக் செய்வதில் தான் அதிக ஆர்வமும் காட்டி வருகிறாராம்.
தெலுங்கில் நாகசைதன்யா - பூஜா ஹெக்டே இருவரும் நடிக்க, தமிழில் இயக்கிய வெங்கட்பிரபுவே தெலுங்கிலும் இந்தப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, எஸ்.ஜே.சூர்யாவுக்கு பாராட்டுக்களை பெற்றுத்தந்த அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் ராணா நடிப்பார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது..