அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கதாநாயகனாக சிம்புவுக்கு கைகொடுத்த படமாக மட்டுமல்ல, ஹீரோ சிம்புவா, இல்லை எஸ்ஜே சூர்யாவா என கேட்கும் அளவுக்கு இருவருக்குமே முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு
இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை மற்றும் தெலுங்கு டப்பிங் உரிமை இரண்டையும் நடிகர் ராணாவின் தந்தை தனது சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பாக கைப்பற்றியுள்ளார். அதேசமயம் டப்பிங் செய்வதை விட ரீமேக் செய்வதில் தான் அதிக ஆர்வமும் காட்டி வருகிறாராம்.
தெலுங்கில் நாகசைதன்யா - பூஜா ஹெக்டே இருவரும் நடிக்க, தமிழில் இயக்கிய வெங்கட்பிரபுவே தெலுங்கிலும் இந்தப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, எஸ்.ஜே.சூர்யாவுக்கு பாராட்டுக்களை பெற்றுத்தந்த அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் ராணா நடிப்பார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது..