ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு 30 ஆயிரத்து 735 மையங்களில் இன்று(பிப்., 19) காலை 7 மணிக்கு துவங்கியது. நடிகர் விஜய் சென்னை, நீலாங்கரை பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுபதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே வந்து ஓட்டளித்தார். விஜய்யை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து ஓட்டுப்போட்டுவிட்டு வந்த விஜய், தன்னால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ வைரலானது.
கடந்தமுறை சட்டசபை தேர்தலின் போது சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய் இன்று, சிவப்பு நிற மாருதி காரில் வந்து ஓட்டளித்து சென்றார்.
![]() |