மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர் இயக்கும் படம் இறைவன் மிகப் பெரியவன். இதன் கதையை வெற்றிமாறன், எழுத்தாளர் தங்கம் இணைந்து எழுதியிருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் துவக்க விழா நேற்று நடந்தது.
இதில் அமீர் பேசியதாவது: பாரதிராஜா நிறைய கதைகளை வெளியில் வாங்கி படம் இயக்குவார். ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் கொஞ்சம் சினிமாவில் ஒரு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்றலாம் என நானே துவங்கியது தான் இது.
நானும் வெற்றிமாறனும் தினமும் ஒரு புராஜக்ட் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். அப்போது அவரிடம் இருந்த இறைவன் மிகப்பெரியவன் கதையை நான் இயக்கட்டுமா என்று கேட்டேன். கண்டிப்பாக செய்யலாம் என்றார். அப்படித்தான் இந்த படம் தொடங்கியது.
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்கு புதிதாக படம் இயக்க வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள், அல்லது தான் சார்ந்திருக்கும் கட்சி அடையாளங்களை முன் நிறுத்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இது மோசமான விசயமாக இருக்கிறது. அதற்காக இந்த படத்தை இயக்க வேண்டும் என தோன்றியது.
மக்கள் பார்க்காத புதிய விசயம் எதையும் சொல்லப்போவதில்லை. நீங்கள் பார்த்த விசயங்களை நினைவுகளை தான் இந்தப்படம் சொல்லும். ஓட்டுக்காக மக்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப்படம் அழுத்தமாக சொல்லும். என்றார்.