பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் |
இயக்குனரும், நடிகருமான சசிகுமார் தற்போது பகைவனுக்கு அருள்வாய், காமென்மேன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு அஞ்சல என்ற படத்தை இயக்கிய தங்கம் சரவணன் இயக்குகிறார். அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ்மோகன், அபிராமி ராகுல், ஜோ மல்லூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், ராமி ஒளிப்பதிவு செய்கிறார். மோகன் தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
படம் பற்றி இயக்குனர் தங்கம் சரவணன் கூறியதாவது: உலகம் முழுக்க அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படமாக இப்படம் இருக்கும். இது ஆக்சன், செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்த திரைப்படமாக இருக்கும். சசிகுமார் என்னுடைய முந்தைய படமான 'அஞ்சல' படம் பார்த்து, என்னுடைய முயற்சியை முழுமையாக பாராட்டினார். அவர் இந்த திரைக்கதையை கேட்டபோது, எல்லா தரப்பு ரசிகர்களிடமும் நிச்சயம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்தார். சசிகுமாரின் கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. அதை தாண்டியும், திரைக்கதையில் ஏராளமான ஆச்சர்யங்களும் உள்ளது. என்றார்.