நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் எப்ஐஆர். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கவுதம் மேனன் நடித்துள்ளனர். நாளை(பிப்., 11) இந்த படம் வெளிவருகிறது.
இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இந்த படத்தை நல்ல லாபத்துக்கு விற்றதாகவும், படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும் விஷ்ணு விஷால் தனது பேட்டியில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து படம் வியாபாரமான தொகை குறித்து வெவ்வேறு விதமான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது.
இதை தொடர்ந்து விஷ்ணு விஷால் தெரிவித்திருப்பதாவது: எப்ஐஆர் வணிகம் பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. படம் வெளியீட்டுக்கு முன்பே தியேட்டர்கள் அல்லாத விற்பனையாக 22 கோடிக்கு விற்பனையானது மகிழ்ச்சியாக இருக்கிறேன். பார்வையாளர்களின் அன்பே இறுதி தீர்ப்பு என்கிறார்.