ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் |
சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் 169வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது இப்போதுவரை சஸ்பென்ஸாக இருந்து வருகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக பல மாதங்களாகவே செய்திகள் வெளியாகின. அதையடுத்து கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ், பால்கி போன்றவர்களும் அந்த பட்டியலில் இடம் பிடித்தார்கள். நேற்று கூட வெற்றிமாறன் இயக்க போவதாக தகவல் வந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலில் ரஜினியின் 169வது படத்தை விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை இயக்கியிருக்கும் நெல்சன் இயக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத்தே இந்த படத்திற்கும் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.